சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் கட்டுமான பணிகளின்போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஜோதி உயிரிழந்தார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கட்டட பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஆனந்த் உயிரிழந்தார். சேலம் அம்மாபேட்டையில் பெயர்ப் பலகை மாற்ற முயன்ற தண்டபாணி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.