சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரித்திருத்துள்ளது. மூன்றே நாட்களில் 40 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.