சென்னை: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர். வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி, சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி, மதுரை நகரம், தருமபுரியில் தலா 106 டிகிரி வெயில் கொளுத்தியது.