விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாததால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.