டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார். பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி மனு அளித்துள்ளார். பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைக்கவும் சரணடைவதில் விலக்கு அளிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றத்தில் சரணடையுமாறும், அதன்பிறகு தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க கோரலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.