அதை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை எழுப்பியுள்ளீர்கள். நாங்கள் இதை பற்றி நீண்ட நாள் யோசித்து வந்தோம். வீடியோ கான்பரன்ஸ் முறையிலான விசாரணையை நிறுத்திய உயர்நீதிமன்றங்களிடம் விளக்கம் கேட்கப்படும். அனைத்து உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிடமும் கேட்போம்’’ என்றார். வீடியோ கான்பரன்ஸ் முறை செயல்படுகிறதா என்பது குறித்து பதில் மனுதாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்கள்,தீர்ப்பாயங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.