இதுதொடர்பாக சலூன்கடை உரிமையாளர் சத்யா கூறியதாவது: கோடைகாலத்தில் இளைஞர்கள் ‘சம்மர் கட்டிங்கில் தான் ஆர்வம்’ காட்டுகின்றனர். ஆஃபர் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களால் தொடங்கப்பட்டுள்ள சலூன் கடைகள், தற்போது இளைஞர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால், எங்களை போன்ற நடுத்தர சலூன்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் தான் இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக புதிய புதிய அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை கொண்ட சலூன் கடைகளில் தள்ளுபடி விற்பனை நடக்கிறது என்றார்.
மருத்துவர் தனலஷ்மி கூறியதாவது: சம்மர் கட்டிங் வெட்டுவதால் தலையில் ஈரம் தேங்காமல் விரைவில் உலர்ந்துவிடும். வியர்வை, அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்யலாம். நீண்ட முடிவைத்திருக்கும் இளைஞர்கள் பொடுகு, புண், தலையில் ஈரம் தங்குவதால் சைனஸ் பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர். ஆனால், சம்மர் கட் செய்வதால் தலையில் முடியின் அடர்த்தி குறைந்துவிடும். எனவே, தினமும் நீரில் தலைக்கு குளித்தாலும் முடி உடனடியாக உலர்ந்துவிடும், ஈரம் தங்காது. கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு 4 செ.மீ அளவிற்கு முடியை வைத்திருக்க வேண்டும் என்றார்.