கோயம்புத்தூர்: சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும்போது மணிகண்டன், மகள் தமிழ்செல்வி(15), அண்ணன் மகள் புவனா(13) ஆகியோர் உயிரிழந்தனர். வீடுக்கு அருகில் உள்ள குட்டைக்கு நீச்சல் பழக அழைத்து சென்ற போது இந்த விபரீதம் நிகழந்துள்ளது.