சென்னை: ‘சுக்ரயோகம்’ என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியாவின் ஆளுநர்கள் என்று முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. ரயில் விபத்தால் நாடே அதிர்ந்தபோது குளுகுளு வாசத்தில் அரசியல் நடத்திய ஆளுநர், துணைவேந்தர்களை அழைத்து தனது அறிவாற்றலை காட்டுவதாக நினைத்து பாதி வெந்தவர் என்பதை காட்டுகிறார். தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி ஆளுநர் தனது முதிர்ச்சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார் என்று முரசொலி கடுமையாக சாடியுள்ளது.