பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில்,‘புகழேந்தி ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.25 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விரக்தியில் புகழேந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது,’என்றார்.