சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு, வரத்து உள்ளிட்டவை குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.