தகவலறிந்த ராணுவ வீரர்கள், பல மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் 74 மாணவர்கள், 7 ஆசிரியர்களையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் கல்பேஷ் நிகாவத் கூறுகையில், ‘கடும் பனிப்பொழிவு இருந்ததால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதனால் நாங்கள் காசிகுண்டு என்ற இடத்தில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்தோம். நாங்கள் சென்ற வாகனத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை பார்த்து பயந்துவிட்டோம். சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள், எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து பத்திரமாக மீட்டனர்’ என்றார். அதேபோல் சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள இந்தியா-சீனா எல்லையின் நாதுலா என்ற இடத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.