அதையடுத்து கடலோர காவல் படை மீட்புப் பிரிவு தளபதி கார்த்திகேயன் தலைமையிலான குழு, விபத்துக்குள்ளான படகை மீட்க விரைந்தது. சிறிது நேரத்தில் கடலோர காவல்படை கப்பல், விபத்து நடந்த இடத்தை அடைந்தது. அப்போது மீன்பிடி படகு பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது. அதில் இருந்த மீனவர்களும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.
கடலோர காவல்படையினரின் முயற்சியின் பலனாக, படகில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 5 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின் அந்த படகும் மீட்கப்பட்டது. இருந்தபோதும் படகின் 75% பகுதி நீரில் மூழ்கி இருந்ததால், படகை உடனடியாக கரைக்கு கொண்டு வர முடியவில்லை என்று கடலோர காவல்படை தெரிவித்தது.