சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.