புவனேஷ்வர்: செகந்திராபாத் அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். பி-5 பயணிகள் பெட்டியின் ஏசி பகுதியில் இருந்து புகை வௌியானதால், ஒடிசாவின் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனால் அந்த ரயில் காலதாமதமாக சென்றது.: மேற்கு வங்க மாநிலம் சியால்டாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் உ.பி மாநிலம் கவுசாம்பி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் பொதுப்பெட்டியில் திடீரென தீப்பற்றியது.