ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ள வேண்டிய கூட்டணி மற்றும் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து அவர் பட்டியல் தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் கூட்டணியில் சில புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று தெரிகிறது. இதற்கு ஏற்றார்போல் அமைச்சரவையிலும் மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த பா.ஜ தலைவர்களைகட்சிப்பணிக்கு அனுப்பவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.