அப்போது 5 கோடியே 60 லட்சம் ரொக்கப்பணம், 68 கட்டி வெள்ளி, 103 கிலோ நகை வெள்ளி, 1 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 7.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித்குமார் பண்டாரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இது தொடர்பாக புரூஸ்பேட்டை காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வருவாய்த்துறையினருக்கு பணம் மற்றும் தங்கம் அனுப்பப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.