மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சீர்காழி சட்டநாதர் கோயிலில் மாலை நடைபெறும் யாகசாலை பூஜைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.