ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடத்துநர் சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் என 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.