அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கிட்டு கொண்டோம். ஆரம்பத்தில் லாப பணத்தை சரியாக கொடுத்த பாண்டியராஜ், பிறகு என்னிடம் தொழில் செய்ய வாங்கிய பணம் மற்றும் எனது லாப பணம் ரூ.30 லட்சத்தை தராமல் ஏமாற்றினார். அதற்காக கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. அதேபோல், எனது ‘மாருதி ஐ 20 ஸ்போர்ட்ஸ்’ காரை, 17,000 வாடகை தருவதாக ஆசை வார்த்தை கூறி எடுத்து சென்றார். அதன் பின், 2 மாதம் 10,000 கொடுத்து ஏமாற்றினார்.
அதன் பின் பாண்டிராஜ் குறித்து விசாரித்த போது, என்னை போல், 4 பேரிடம் இரண்டு கார் மற்றும் 88 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.1.18 கோடி ரூபாய் ஏமாற்றியது தெரிந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து காரையும் பணத்தை மீட்டு தர வேண்டும்’ என அந்த புகாரில் கூறியிருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த இன்ஸ்பெக்டர் பரணி, ஆந்திர மாநிலம், கீழ் திருப்பதியில் தலைமறைவாக இருந்த பாண்டியராஜை நேற்று கைது செய்தனர். பிறகு, பூந்