சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். கொசு வலை வியாபாரியான இவர், தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8) மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்றிரவு கரூர் சென்றுவிட்டு மீண்டும் சிறுமுகை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் வந்த கார் ஒன்றுடன், நெசவாளர் காலனி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

நள்ளிரவில் அதிவேகமாக சென்ற கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி