பதவி நீக்கப்பட்ட ராஜஸ்தான் மாஜி அமைச்சர் சிவசேனாவில் இணைந்தார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உதயபூர்வதி தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ராஜேந்திர சிங் குதா தனது கட்சி மீதே விமர்சனம் செய்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் சிவசேனாவில் இணைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்கெலாட் தலைமையிலான அரசில் பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர சிங் குதா. மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் அசோக் கெலாட் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக விமர்சனம் செய்ததையடுத்து அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிவசேனாவில் இணைவதாக அறிவித்துள்ளார். அவரது தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே அவரது முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததில் அவரது அமைச்சர் பதவியையே இழந்த ராஜேந்திர சிங் குதாவை சிவசேனாவுக்கு வரவேற்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்