இது தொடர்பாக பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனவர்களில் சென்னையை சேர்ந்த கருணாநிதி, திருவள்ளுர் ராஜா, திருவண்ணாமலை ஏழுமலை, பொம்மையா பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் ஆகியோரும் அடங்குவர். இதே போல் ஆந்திராவை சேர்ந்த 2 பேரும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒரு பக்தர்களும் காணாமல் போனதாக கேரளா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் பத்தினம் திட்டா மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.