தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.15 லட்சத்தை பறிமுதல்செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.