இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது பிறந்தநாள் விழாவை திருச்சி பகுதியில் போஸ்டர் ஒட்டி பெரிய அளவில் கொண்டாடினார். அதனைத்தொடர்ந்து நேற்றிரவு இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார், ஜெகனின் வீட்டிற்கு சென்று, ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 9 பேர் உட்பட 10 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.