பள்ளிப்பட்டு அருகே தொழிலாளியிடம் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே தொழிலாளியிடம் செல்போன், பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த புதிய நெடியம் காலனியைச் சேர்ந்தவர் மோகன்(38). இவர் கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள சாலையில் மோகன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள், மோகனிடமிருந்த செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் நாகபூஷனம் விசாரணையில் ஈடுபட்டார். இதில், நொச்சிலிதலையாரி காலனியைச் சேர்ந்த ராஜதுரை(21), அரக்கோணம் அன்வர்திகான்பேட்டையைச் சேர்ந்த கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி(20), நெமிலி மேல்களத்தூரைச் சேர்ந்த நிதிஷ்குமார்(19) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு: முதல்வருக்கு குடும்பத்தினர் நன்றி