சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் உட்பட மேலும் சிலருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல். தாம்பரம் போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் அண்மையில் சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.