இது, கட்டணத்தை அதிகரிப்பதற்கான யுக்தி. சாதாரண ரயிலின் கட்டணத்தைவிட வந்தேபாரத் ரயிலுக்கான கட்டணம் சுமார் நான்கு மடங்கு வரை அதிகம். சாதாரண ரயிலில் வந்தே பாரத் தர பெட்டிகள் இணைக்கப்பட்டால், கட்டணம் தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். ஏழை, நடுத்தர மக்களுக்கு ரயில் பயணம் என்பது கனவில்தான் என்று எச்சரிக்கிறார் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்.