இந்த எருது விடும் விழாவில் கலந்து கொண்ட கால்நடைகள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கோயில் அருகே வந்து கோவிலில் முன்பு மண்டி இட்டு வணங்குவது தான் வெற்றி என கருதிக் கொண்டு, ஊர் பொதுமக்கள் சார்பாக இவ் விழாவை சிறப்பாக நடத்தினர்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை இந்த எருது விடு விழா நடைபெறுவதால் பல்வேறு மாவட்டங்களில் திருச்சி, கரூர், திண்டுக்கல்,தேனி ஆகிய ஊர்களில் இருந்தும் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விழா குழுவினர்கள் ஊர்கவுண்டர், ஊர்பெத்தகாப்பு, தண்டபாணி, தங்கவேல்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ் பிரபு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.