சென்னை: ரத்னம் படத்திற்கு தியேட்டர் ஒதுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார். நாளை ரத்னம் வெளியாக உள்ள நிலையில் திருச்சி, தஞ்சை ஏரியாவில் தியேட்டர் தரவில்லை. தியேட்டரை ஒதுக்காமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என நடிகர் சங்க பொதுச் செயலாளரும், ரத்னம் படத்தின் நாயகனுமான விஷால் புகார் தெரிவித்துள்ளார்.