அதன்படி கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மாலிக்கின் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், அவரது உறவினர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சால்ட் லேக் பகுதியில் ஜோதிப்ரியா மாலிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மல்லிக் கைது செய்யப்பட்டார். நீரிழிவு உள்பட பல்வேறு நோய் பாதிப்புள்ள அவருக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 5ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
கைது திட்டமிட்ட சதி – மாலிக் குற்றச்சாட்டு: கைது பற்றி ஜோதிப்ரியா மாலிக் கூறியதாவது, “திரிணாமூல் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியால் தீட்டப்பட்ட திட்டமிட்ட சதி” என்று குற்றம்சாட்டினார்.