எலி கடித்து பெண் குழந்தை பலி: தெலங்கானாவில் சோகம்

திருமலை: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், பெத்த கற்பமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்- லட்சுமி கலா தம்பதி. இந்தநிலையில், 40 நாட்களுக்கு முன்பு லட்சுமி கலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை லட்சுமி கலா தூங்க வைத்துவிட்டு, வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் தாய் லட்சுமி கலா வந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கில் எலி கடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் சிகிச்சைக்காக ஐதராபாத் நிலோபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Related posts

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!