பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், “டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் 3 முறை ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இதை மக்களுக்கு வௌிப்படுத்தவே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.ராம நவமி நாளில் கெஜ்ரிவால் மக்களிடையே இல்லாதது இதுவே முதல்முறை. பொய் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.