அப்போது, சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது. சரணடைய விலக்களிக்கவும் கூடாது. காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்குமாறு ராஜேஷ் தாஸ் கூறுகிறார். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான் என்றார். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி அவருக்கு எதிராக சதி செய்து பொய் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.