இந்த குழு குறித்த விவரங்களை பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அவர்களின் இணையதளத்தில் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு பிரிவு, ராகிங் தடுப்பு படைகள் அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ராகிங்கில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ராகிங் தொடர்பான யு.ஜி.சி.யின் விதிமுறைகளை பின்பற்றாத கல்லூரியின் முதல்வர், பல்கலைக்கழக பதிவாளர் தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுவிடம் பதில் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.