மதுரை: குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி தரக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை உரிமம் தருவது சட்டங்களுக்கு எதிரானது என கோர்ட் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் திருவாடனை தாலுகாவில் பாம்பார் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.