இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில்,
‘இந்திய – பாகிஸ்தான் எல்லை வேலிக்கு முன்புள்ள வயற்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, குவாட்காப்டர் (சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்), 2.7 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் மீட்கப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் போதைப் பொருட்களை கடத்தும் கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்திற்கு அருகிலுள்ள நெல் வயலில் ஒரு ட்ரோன் மற்றும் ஹெராயின் அடங்கிய பாட்டில் மீட்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.