புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தாமரை வடிவில் நுழைவு வாயில் அமைப்பு பற்றி தேர்தல் அதிகாரிகளிடம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அப்புறப்படுத்தினர்.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?