பல மாதங்கள் ஆகியும் அந்த மண்குவியலை நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் உள்ளது. இதனால் முக்கோணம் பகுதியிலிருந்து புது நகர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் இந்த மண் குவியல்கள் உள்ளது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.