சென்னை: ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை கீழுள்ள கோயில்களில் நேரலை செய்ய கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.