அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து பிகாரில் நடைப்பயணம் மேற்கொண்டார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ராகுல் காந்திக்கு ஏராளமான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜீப்பில் சென்று மக்களிடம் ராகுல் காந்தி குறைகளை கேட்டறிந்தார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.