கடவுள்களின் படத்தை காண்பிப்பதனால் ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது. நாட்டில் பணவீக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் பலர் வேலை இல்லாமல் உள்ளனர். நெருக்கடிகள் ஏற்படும் போது பாகிஸ்தான்,சீனா மற்றும் கடவுள்களின் பெயர்கள் உள்பட பல சாக்குபோக்குகளை மோடி சொல்வார். இதற்கு முன் பல உத்தரவாதங்களை அளித்துள்ள மோடி இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மோடியின் வலையில் யாரும் விழுந்து விடாதீர்கள்’’ என்றார்.