போலீசார், கொள்ளை நடந்த கடைகளில் சோதனை செய்து, அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குரங்குத் தொப்பி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனது முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக கேமராவை மேல் நோக்கியவாறு திருப்பிவிட்டு கையில் வைத்திருந்த பெரிய இரும்பு ராடால் 3 கடைகளின் ஷட்டர்களில் இருந்த பூட்டுகளை உடைத்து கொள்ளையடித்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், அதே பகுதியில் உள்ள வேறு கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ள நபரின் உருவத்தை வைத்து, மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.