இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்க செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரையில் அதுவரையில் பொன்முடி அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் கடந்த ஜனவரி 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையில் தற்போது உள்ள நிலையே தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.