சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு பொங்கல் பரிசை மக்களுக்கு முதல்வர் வழங்குகிறார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1,000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது.