அவரது பெரிய உருவத்தால், உடனடியாக அவரால் கரையில் ஏறமுடியவில்லை. அப்படியே குளத்தின் கரையில் படுத்துக் கொண்டார். அவரால் எழுந்திருக்கவும் முடியவில்லை. அவரது உதவியாளர்கள் அவரை தூக்கிவிட முயன்றனர். இருந்தாலும் தானே எழுந்து வருவதாக கூறி, அடுத்த சில நிமிடங்களில் எழுந்து நின்று கரையை அடைந்தார். கரைக்கு வந்தவுடன், தனது உதவியாளர்களிடம் ‘எனது நாற்காலி எங்கே?’ என்று கேட்டார். தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு, குளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அமைச்சர் சேற்றில் சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.