சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான காவலர் ஜாமினில் விடுவிப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான காவலர் ராஜதுரை ஜாமினில் விடுவித்துள்ளனர். கடந்த பிப்.25-ம் தேதி அரும்பாக்கத்தில் விஜயலட்சுமி என்பவரிடம் காவலர் ராஜதுரை செயினை பறித்துள்ளார். விஜயலட்சுமியிடம் கைவரிசை காட்டி விட்டு தப்பமுயன்ற காவலர் ராஜதுரையை பொதுமக்கள் தாக்கினர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் ராஜதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சூளைமேடு காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் ஆஜராகி ராஜதுரை கையெழுத்திடவேண்டும் என்று நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!