சில அசாதாரண சூழல்களில் காவல்துறையை ஊக்குவிக்க 5 சிறப்பு நடவடிக்கை விருதுகள் அளிக்கப்படும். நடப்பாண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., தெலங்கானா, திரிபுரா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஆர்.எப்., தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட 204 பேருக்கு பதக்கம் அளிக்கப்பட உள்ளது. மணிப்பூர் டி.ஜி.பி ராஜீவ் சிங், காஷ்மீரில் பணியாற்றிய சி.ஆர்.பி.எப் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி அமித் குமார் ஆகியோர் விருது பட்டியலில் உள்ளனர்.