பிரதமர் மோடி டிவீட் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: உலக சிங்கம் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘உலக சிங்கம் தினம், நமது இதயங்களை தங்கள் வலிமை, பிரம்மாண்ட உருவத்தால் கவர்ந்த கம்பீரமான சிங்கங்களை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம். ஆசிய சிங்கங்களின் தாயகமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள். அவற்றை தொடர்ந்து போற்றிப் பாதுகாப்போம். அவை இனிவரும் தலைமுறைகளுக்கும் செழித்து வளர்வதை உறுதி செய்வோம்,” என்று கூறியுள்ளார்.

Related posts

ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு