பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஜூன் 4-ம் தேதி பிரதமர் மோடிக்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள். ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிடும் ஜெய்ராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது 4 கட்டங்களாக நடந்துள்ள தேர்தலில் 379 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 4 கட்டத் தேர்தல் முடிந்த பின், பிரதமர் பிரச்சார கூட்டத்தில் பேசும் வார்த்தைகளே சர்ச்சைக்குரியதாக உள்ளன. நாட்டில் எந்த அலையும் இல்லை; பாஜகவினரின் பிரச்சாரமே மக்களிடம் எடுபடவில்லை என்றும், அரசின் மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாற்றத்தையும் மக்கள் விரும்புவதாகவும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளர்.

 

Related posts

தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்